சிவாடி சிவன் கோவில்

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமையான கோவில்களில் இந்த சிவாடி சிவன்கோவிலும் ஓன்று. தர்மபுரியில் இருந்து நல்லாம்பள்ளி வழியாக இந்த ஊருக்குசெல்லலாம்,ஏரிக்கரை ஒட்டி வயல்வெளிகளுக்கு நடுவில் இந்த அழகான சிவன் கோவில்இருக்கிறது. கோவில் முழுவதும் செங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.கோவிலின்வெளிப்புறத்தில் கல் மண்டபம் இருந்து…

Continue Readingசிவாடி சிவன் கோவில்

தென்கரை கோட்டை

40 ஏக்கரில் ஒரு தரை கோட்டை தமிழகத்திலேயே இதுதான் பெரியகோட்டை அப்படின்னு சொல்றாங்க,இந்த கோட்டை தருமபுரிமாவட்டத்தில் தென்கரை கோட்டை என்ற ஊரில் அமைந்திருக்கிறது.ஆரம்ப காலங்களில் இந்தக் கோட்டையின் உள்ளதான் ஊர்மக்கள்வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இப்போது இந்த கோட்டை சிதிலமடைந்தநிலையில் இருக்கிறது. இந்தக் கோட்டையை கட்டியவர்…

Continue Readingதென்கரை கோட்டை

அந்தரத்தில் தொங்கும் தூண்

தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு தெரியாத பல கோவில்களில் பல சிறப்புகள் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு கோவிலைதான் இப்போது நாம் பாக்க போகிறோம். தருமபுரியில் கி.பி. 8 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூளம்பரகள் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கிறது.இதை கோட்டை…

Continue Readingஅந்தரத்தில் தொங்கும் தூண்

மாவளி சுற்றுதல்:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகில் ஐகொத்தப்பள்ளி எனும் ஊரில் உள்ள சிறிய குன்றில் பெருமாள் கோவிலும் முருகர் கோவிலும் இருக்கிறது. இந்த முருகர் கோவிலுக்கு பின்புறம் உள்ள பெரும்பாறைக்கு அடியில் 100 க்கும் மேற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் இருக்கிறது. இந்த ஓவியங்களின் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றனர். இந்த ஓவியத்தில் மிக முக்கியமானதாக ஒரு சில விலங்குகளின் உருவமும் பெண்ணின் உருவமும் மாவளி சுற்றும் ஓவியம் உள்ளது. இந்த குகையில் 4 உருவங்கள் மாவளி சுற்றுவது போலும், ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவது போன்ற ஓவியமும் உள்ளது.இந்த மாவளி சுற்றுதல் என்பது தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் இந்த மாவளி சுற்றப்பட்டு வருகிறது.  இதற்கு ஒரு பனைமரத்தை முதலில் தேர்வு செய்கிறார்கள் அது ஆண் பனை மரம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண் பனை மரத்தில் உள்ள பூவை எடுத்து உலர்த்தி பின் ஒரு சிறு குழி தோண்டி அதில் அந்தப் பூவை வைத்து நெருப்பு மூடப்படுகிறது. பின்பு அதனை மூடி விட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அந்த குழியிலேயே அந்த பூ வைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பனை மட்டையை உரித்து அதை நான்காக பிரிக்கப்படுகிறது. புதைத்து வைக்கப்பட்ட பனை பூவை எடுத்து அதை அம்மியில் வைத்து இடித்து தூளாக்கி அதை ஒரு துணியில் வைத்து தேவையான அளவு கட்டி விடுகிறார்கள். அந்த துணியை எடுத்து இந்த பனை அட்டையில் வைத்து கட்டி விடுகிறார்கள். பின்பு அந்த துணியில்  நெருப்பு வைத்து மாவளி சுற்ற படுகிறது. மாவளி சுற்றும்போது மாவளியோ மாவளி என்று கூச்சல் இடுவார்கள் இதற்கு மாவளி சுற்றுதல், கார்த்திகை சுற்றுதல் என்று வெவ்வேறு பெயர்கள் உள்ளன.5000 வருடங்களுக்கு முன் இருந்து தொடரும் தமிழரின் மரபு. வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி.

Continue Readingமாவளி சுற்றுதல்:-